போராட்டத்தை சிறிதும் கண்டுகொள்ளாத தமிழக அரசு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை அரசு அழைத்து பேச வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் போராட்டம்:
தமிழகத்தில் அரசு அறிவித்தபடி ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றும்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டம் நடத்தினாலும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஆசிரியர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், அரசு கோரிக்கையை ஏற்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை (அக்.6) கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம் – அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
இந்நிலையில், போராட்டம் நடத்திய ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் போராட்டம் இன்னும் மெருகேறியுள்ளது. அதாவது, அரசு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் எங்களை தண்டிப்பது ஏன் என ஆசிரியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்துள்ள நிலையில் அரசு அவர்களை அழைத்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.