1,000 பெண் ஊழியர்களை நியமிக்க உள்ள டாடா நிறுவனம் – புதிய திட்டம்!
டாடா நிறுவனம் தற்போதைய நிதியாண்டில் புதிய திட்டங்களின் மூலம் 1000 பெண் ஊழியர்களை நியமிக்க உள்ளதாக தனது அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டாடா நிறுவனம்:
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் நாட்டின் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் மிகவும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால், விரைவில் புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளதாகவும் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தரத்தை உயர்த்த தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!
அதன்படி, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரெயின்போ திட்டத்தின் கீழ் புதிதாக 1000 பெண் ஊழியர்கள் 2023 – 2024 நிதியாண்டில் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், இதன் மூலம் நிறுவனத்தின் பாலின விகிதம் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download