பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5000 அபராதம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரவி உள்ளதால், கட்டுப்பாடு நெறிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி,கல்லூரிகளுக்கு அபராதம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை சரி செய்யும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் முதற்கட்டமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே 10 மாதங்களாக பாடங்கள் நடத்தப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்தது. அதனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான முன்பணம் – மார்ச் 31 கடைசி நாள்!!
பள்ளி, கல்லூரிகளில் அரசு தெரிவித்த கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 2 மாதங்களில் 16 பள்ளி மற்றும் 4 கல்லூரிகளில் 217 மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்ற காரணத்தால் அந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார்.