தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா பணி!!
தமிழகத்தில் எம்.பி.பிஎஸ் படிக்கும் 3 மற்றும் 4ம் ஆண்டு முடித்த மாணவர்களை கொரோனா சிசிக்சை பணிக்கு அமர்த்த அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரி மாணவர்கள்:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருவதால் தொற்று எண்ணிக்கை தினசரி உயர்ந்து வருகிறது. அரசு தடுப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்குகள், புதிய கட்டுப்பாடுகள் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முயன்று வருகிறது. நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகரிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், மருத்துவர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த மருத்துவர்கள் பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு, மருத்துவக் கல்லூரி 3, 4ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை கொரோனா சிகிக்சை பணிகளுக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் கொரோனா சிகிக்சை பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தனி கவனம் செலுத்த முடியும்.
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் – முகேஷ் அம்பானி அறிவிப்பு!!
இந்த மாணவர்கள் 7000 பேரும் கோவிட் வார்டுகளுக்குள் நேரடியாக பணியமர்த்தப்பட மாட்டார்கள். இம்மருத்துவ மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு வீடியோ கால் அல்லது தொலைபேசி மூலம் ஆலோசனைகள் வழங்கவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதல்கட்ட ஆலோசனைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்