தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில், மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி விட்டது. மக்கள் வெயில் தாக்கம் காரணமாக பெரும் சிரமம் அடைந்துள்ளனர். ஆனாலும் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தற்போது மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

24.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

மாநில அரசுகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு முடிவு!!

25.04.2021 & 26.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

27.04.2021 & 28.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்கள் அதிகரிப்பு? இன்று முக்கிய அறிவிப்பு!!

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – தலைமை செயலர் ஆலோசனை!

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!