தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்கள் அதிகரிப்பு? இன்று முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது ஞாயிற்று கிழமைகளில் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அந்த நாட்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. தினசரி இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் முழு ஊரடங்கு நாட்களை அதிகரிப்பது, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மற்றும் நாளை பொதுமுடக்கம் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
அதில் அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாட்கள் / பணி நேரங்களை குறைப்பது, வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு நேரத்தை மாற்றுவது, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு உள்ள நிலையில் அந்த நாட்களை நீட்டிப்பது போன்ற விதிமுறைகளை அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.