கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு – வருடந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!!

0
கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு - வருடந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!!
கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு - வருடந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!!
கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு – வருடந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நாளை தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு:

தமிழக அரசு தேர்வுத்துறை சார்பில் கிராமப்புறங்களில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு திட்டத்தின் கீழ் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. கிராம பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020-21 ஆண்டுக்கான தேர்வுகள் நாளை (24.01.2021) நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 12-ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.

தீயணைப்பு துறை சார்பில் ‘தீ செயலி’ அறிமுகம் – முதல்வர் தொடங்கி வைத்தார்!!

திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவர்கள் மொத்தம் 1293 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 16 மையங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாவட்டத்திற்கு தலா 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

தமிழக அரசின் நிதித்துறையில் 43 தட்டச்சர் பணியிடங்கள் – ஆணை வழங்கல்!!

இந்த தேர்வுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!