தீயணைப்பு துறை சார்பில் ‘தீ செயலி’ அறிமுகம் – முதல்வர் தொடங்கி வைத்தார்!!
தீ விபத்து நடைபெறும் இடங்களை துல்லியமாக கண்டறிய “தீ” என்ற செயலி தமிழக தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“தீ செயலி”:
தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணித்துறை ‘காக்கும் பணி எங்கள் பணி’ என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு சேவை புரிந்து வரும் முக்கிய துறையாக உள்ளது. இந்த துறையின் முக்கிய பணியாக கடும் தீயில் இருந்து மக்களின் உயிரையும் அவர்களது பொருள்களையும் பாதுகாப்பது மற்றும் இயற்கை இடர்பாடுகளான புயல், வெள்ளம், அதிக மழை, நிலச்சரிவுகள், சுனாமி போன்றவற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவது அவர்களது முதன்மையான கடமையாகும்.
12ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளியை மூட உத்தரவு!!
மேலும் தற்போது ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுவதினால் ஏற்படும் இழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன. இந்த மாதிரி சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தமிழக அரசும் தீயணைப்பு துறைக்கு தேவையான பல நவீன இயந்திரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கியுள்ளது.
12ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளியை மூட உத்தரவு!!
இதன்படி தற்போது தீ, விபத்து, வெள்ளம், ஆழ்துளைக்கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மக்கள் எளிதில் தீயணைப்பு துறையை தொடர்பு கொள்ள தமிழக அரசு ‘தீ’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கூகுள் பிலே ஸ்டார் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நாட்டிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்