தமிழக அரசின் நிதித்துறையில் 43 தட்டச்சர் பணியிடங்கள் – ஆணை வழங்கல்!!
நிதித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு தணிக்கை துறைக்கு TNPSC சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு தட்டச்சர் பணிக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 43 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதன் அடையாளமாக முதலில் 15 பேருக்கு பணி நியமன ஆணையை துணை முதல்வர் பன்னீர் செல்வம் வழங்கியுள்ளார்.
தட்டச்சர் பணி நியமன ஆணை:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் அரசு பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு தட்டச்சர் பணிகளுக்கான Group 4 தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியிடங்களுக்கான கலந்தாய்வு நேற்று அந்ததந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
அதில் நிதித்துறைக்கு கீழ் உள்ள கூட்டுறவு தணிக்கை துறையில் காலியாக உள்ள தட்டச்சர் பணிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு 43 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் அடையாளமாக முதலில் 15 பேருக்கு பணிநியமன ஆணையை துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.
12ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளியை மூட உத்தரவு!!
மேலும் நிதித்துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேந்தெடுக்கபட்ட 32 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது. அவர்களில் அடையாளமாக 8 பேருக்கு பணிநியமன ஆணையை துணை முதல்வர் வழங்கினார். பணிநியமன ஆணை வழங்கப்படும் விழாவில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்