12ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளியை மூட உத்தரவு!!

0
12ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி - பள்ளியை மூட உத்தரவு!!
12ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி - பள்ளியை மூட உத்தரவு!!
12ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளியை மூட உத்தரவு!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஆத்தூர் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளிக்கு வருகிற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் உள்ள மாணவிகள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட உள்ளனர்.

பள்ளி மாணவிக்கு கொரோனா:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 5 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மாணவர்கள் சிலர் கொரோனா தாகத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளியில் மேல்வல்லம் கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் பயின்று வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

ஜூலை 1 முதல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு Ph.D கட்டாயம் – யுஜிசி உத்தரவு!!

இந்த நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தும்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் அதே விடுதியில் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் படிக்கும் தளவாய்ப்பட்டி, தேக்கம்பட்டியைச் சேர்ந்த இரண்டு மாணவிகளும் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!

எனவே அவர்களையும் வகுப்பில் ஒன்றாக படிக்கும் மாணவிகள் என மொத்தம் 66 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். அவருக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்த போதிலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!