தமிழகத்தில் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் – விரைவில் நடத்த கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படாததால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. எனவே விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பல்கலை விளையாட்டு போட்டிகள்:
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் அவர்களுக்கு தகுதி சான்றிதழும் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலமாக விளையாட்டு துறை பிரிவு மூலமாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
இந்த சலுகை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 300க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. தற்போது தான் முதல்வர் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் மார்ச் 8 ஆம் தேதி முதல் 31 வரை இந்த போட்டிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் பேட்டி!!
பிற பல்கலைக்கழகங்கள் இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதன் காரணமாக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என கனவுடன் இருக்கும் மாணவர்கள் போட்டிகள் நடத்தப்படாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த போட்டிகளில் கலந்துகொள்ள அதிகபட்ச வயது வரம்பாக 25 வயது நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 25 வயது பூர்த்தி செய்தவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு!!
எனவே அவர்களுக்கான வயது வரம்பை 25 இருந்து 26 ஆக மாற்ற வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது மூலமாக மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்