உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் பேட்டி!!
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், உயர்கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளோம் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி தமிழகம் முதலிடம்:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு!!
இந்நிலையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இடஒதுக்கீடு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், உயர்கல்வியில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்