தமிழகத்தில் கிராம கவுசல்யா திட்டத்தின் மூலம் 5692 பேருக்கு வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்!!
தீனதயான் உபாத்யாயா கிராம கவுசல்யா யோஜனா திட்டத்தின் மூலம் 5692 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தி.மு.க எம்.பி கனிமொழிக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி பதில் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பதில்:
தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தீனதயான் உபாத்யாயா கிராம கவுசல்யா யோஜனா திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டவர்களில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவில் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது? என நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி எழுத்துப்பூர்வ அடிப்படையில் கேள்விகளை கேட்டார்.
10, 12ம் வகுப்புகளுக்கான ஆன்லைன் தேர்வில் 10% மதிப்பெண்கள் – கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி!!
அதற்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “தூத்துக்குடி மாவட்டத்தில் தீனதயான் உபாத்யாயா கிராம கவுசல்யா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஐஐடி துறையில் 52 பேருக்கும், சுகாதாரத்துறையில் 3 பேருக்கும், ஜவுளி, கைத்தறி உள்ளிட்ட துறைகளில் 15 பேருக்கும் மற்ற துறைகளில் 99 பேர் என 169 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது!!
தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் 11,655 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 5692 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.சி பிரிவில் 2642 பேருக்கும், எஸ்.டி பிரிவில் 162 பேருக்கும் ஓபிசி பிரிவில் 1877 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது”, என அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்