10, 12ம் வகுப்புகளுக்கான ஆன்லைன் தேர்வில் 10% மதிப்பெண்கள் – கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் படித்த பாடங்கள் குறித்து கற்றல் திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியான நிலையில் 10 சதவிகித்திற்கு குறைவான மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்கள் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை விரைவில் தயார்படுத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆன்லைன் கற்றல் திறனறிவு தேர்வு:
தமிழகத்தில் 10 மாதங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் எந்த அளவில் கற்றுள்ளனர் என்பதை அறிந்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது.
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது!!
இதன்படி ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட பாடங்கள் குறித்து மாணவர்களின் கற்றல் திறனை அறிய கற்றல் திறனறிவு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் அதிகப்படியான மாணவர்கள் 10 சதவிகிதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களுக்கு நேரத்தை வீணடிக்காமல் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை தவிர்த்து விரைவில் பாடங்களை நடத்தி முடிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். மேலும் மாணவர்களுக்கு தினமும் சிறு தேர்வு நடத்தி மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்