தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மாத ஊதியம் – புதிய அறிவிப்பு!!
வங்கி விடுமுறை காரணமாக, தமிழகத்தின் மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏப்ரல் 3ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கி விடுமுறை
கடந்த மார்ச் 27ஆம் தேதி சனிக்கிழமை துவங்கி வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல சனி, ஞாயிற்று கிழமை விடுமுறைக்கு பிறகு அரசு பொது விடுமுறை தொடர்ந்து வருவதால் வங்கிகளுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஏப்ரல் 3 ஆம் தேதியில் ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த செய்தி தொடர்பாக மாநில போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வங்கிகளின் ஆண்டு கணக்கு ஏப்ரல் 1 அன்று முடிவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்கள்!!
தொடர்ந்து ஏப்ரல் 2, புனித வெள்ளி பொது விடுமுறைக்காக அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மார்ச் மாத ஊழியம், ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.