தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்கள்!!
இந்தியாவில் மீண்டுமாக பொது முடக்கம் அறிவிக்கப்படும் என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் வட மாநில மக்கள் குவிந்துள்ளனர்.
பொதுமுடக்கம்
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக வீசிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வசதியாக இருக்கும் மேலை நாடுகள் கூட கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். இந்த சூழலில் இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்படுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
ஆனால் இந்தியாவில் மீண்டுமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் இழந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருந்தாலும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதே போல மத்திய அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 58 பேர் கொரோனவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தேர்வு பணிகளில் பாட வேளைக்கு மட்டுமே ஊதியம் – கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!!
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படும் என தகவல்கள் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்க அச்சத்தால் கோவை, கரூர், திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் வசித்து வரும் வட மாநில மக்கள் பேருந்துகள் மூலம் திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்த மக்கள் ஹவுரா ரயில் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Tamilnadu vitu all vadakans poitah nalairukum
வட மாநில க்கார்கள் போனால் போகட்டும் அவர்களை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்காரர்களை குறைந்த பட்சம் மாதம் 18,000 ருபாய் வேலைக்கு அமர்த்துங்கள் தமிழ்நாட்டை விட்டுவிட்டு வெளிநாட்டிற்க்கு போக மாட்டார்கள். அவர்களை வைத்து ஒரு நாள் 1000ருபாய் சம்பளத்தை வாங்கி அதில் 300 ருபாய் எடுத்துக்கொண்டு 700 ருபாய் சம்பளம் தருவதாக சொல்வதால் தமிழ்நாட்டு சீர்கேடுகள் மாறிபோகிறது இன்றைய காலத்தில்.தயவுசெய்து சிந்தியுங்கள் …??? மோடியை ஒழித்து கட்டுங்கள்