தமிழகத்தில் இன்று (பிப்.2) கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் வறண்ட வானிலை நிலவிய நிலையில், இன்று (பிப்.2) சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தென்னிந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (பிப்.3) லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதே போல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பிப்.3 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.