தமிழகத்தில் 3 பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 3 பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கொரோனா உறுதி:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சேலம், திண்டுக்கல் மற்றும் சென்னையில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் 9,11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க 98% பெற்றோர்கள் அனுமதி – அமைச்சர் தகவல்!!
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாரம் ஒருமுறை கொரோனா அறிகுறி குறித்த பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 2 மாணவர் மற்றும் 1 மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்