தமிழகத்தில் 9,11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க 98% பெற்றோர்கள் அனுமதி – அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு 98% பெற்றோர்கள் ஆதரவளித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து 98% பெற்றோர்கள் ஆதரவு அளித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து – பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம்!!
சென்னை திருவல்லிக்கேனியில், சாரண சாரணியர் தலைமையகத்தில் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு கொடியேற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு விடுதிகளில் 43 சமையலர் பணியிடங்கள் அறிவிப்பு – உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு!!
அதில் 98% பெற்றோர்கள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளனர். இதுகுறித்து முதல்வரிடம் கருத்து கேட்டு பின்னர் முடிவு செய்யப்படும். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் அறிவிக்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்