தமிழகத்தில் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கில் புதிய தீவிர கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 15.05.2021 காலை 4.00 மணி முதல்‌ 24.05.2021 காலை 4.00 மணி வரை ஏற்கெனவே அமலில்‌ உள்ள கட்டுப்பாடுகளுடன்‌ அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்‌:

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி, மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ ஆகியவை மட்டும்‌ குளிர்சாதன வசதி இன்றி நண்பகல்‌ 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில்‌, தற்போது இந்தக்‌ கடைகள்‌ அனைத்தும்‌ காலை 06.00 மணி முதல்‌ காலை 10.00 மணி வரை மட்டும்‌ இயங்க அனுமதிக்கப்படும்‌. இவற்றில்‌, ஒரே சமயத்தில்‌ 50 சதவிகிதம்‌ வாடிக்கையாளர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்‌.
  • மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விநியோகம்‌ செய்ய காலை 06.00 மணி முதல்‌ காலை 10.00 மணி வரை மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌. மேற்கூறிய மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி, மீன்‌ கடைகள்‌ தவிர, இதர கடைகள்‌ அனைத்தும்‌ திறக்க தடை விதிக்கப்படுகிறது.
  • பெட்ரோல்‌ டீசல்‌ பங்குகள்‌ ஆகியவை எப்போதும்‌ போல செயல்படும்‌.

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் – அரசு அறிவிப்பு!!

  • ஆங்கில மற்றும்‌ நாட்டு மருந்துக்‌ கடைகள்‌ திறக்க வழக்கம் போல்‌ அனுமதிக்கப்படும்‌.
  • பொது மக்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின்‌ அருகில்‌ உள்ள கடைகளில்‌ வாங்குமாறும்‌, மேற்சொன்ன பொருட்கள்‌ வாங்க அதிக தூரம்‌ பயணிப்பதை தவிர்க்குமாறும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. அவ்வாறு செல்ல முற்படுபவர்கள்‌ தடுக்கப்படுவார்கள்‌.
  • காய்கறி, பூ, பழம்‌ விற்பனை செய்யும்‌ நடைபாதை கடைகள்‌ நண்பகல்‌ 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில்‌, தற்போது, காய்கறி, பூ, பழம்‌ விற்பனை செய்யும்‌ நடைபாதை கடைகள்‌ செயல்பட அனுமதி இல்லை.
  • தேநீர்க்‌ கடைகள்‌ நண்பகல்‌ 12 மணி வரை மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில்‌, தற்போது தேநீர்க்‌ கடைகள்‌ இயங்க அனுமதி இல்லை.
  • மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மதியம்‌ 02.00 மணி முதல்‌ மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • வெளிமாநிலங்கள்‌ மற்றும்‌ வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!