தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் – அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் – அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு உத்தரவில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பு:

கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்றைத்‌ தடுப்பதற்காக, மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25.03.2020 முதல்‌ ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது. தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌, 10.05.2021 காலை 4.00 மணி முதல்‌ 24.05.2021 காலை 4.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம்‌ முழுவதும்‌ முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 09.05.2021 அன்று நடைபெற்ற முதல்‌ அமைச்சரவைக்‌ கூட்டத்திலும்‌, கொரோனா நோய்த்‌ தொற்று பரவல்‌ குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இ-பாஸ் அப்ளை செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தற்போது 10.05.2021 காலை 04.00 மணி முதல்‌ 24.05.2021 காலை 04.00 மணி முடிய அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில்‌, தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌, 15.05.2021 காலை 4.00 மணி முதல்‌ 24.05.2021 காலை 4.00 மணி வரை ஏற்கெனவே அமலில்‌ உள்ள கட்டுப்பாடுகளுடன்‌ பின்வரும்‌ புதிய கட்டுப்பாடுகள்‌ விதிக்கப்படுகின்றன.

பொது கட்டுப்‌பாடுகள்:

  • அத்தியாவசியப்‌ பணிகளான திருமணம்‌, முக்கிய உறவினரின்‌ இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும்‌ மற்றும்‌ மாவட்டங்களுக்கிடையேயும்‌ பயணம்‌ மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்‌. இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல்‌ நடைமுறைக்கு வரும்‌.
  • ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ இரவு 10 மணி முதல்‌ காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்‌.
  • ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ (16.05.2021 மற்றும்‌ 23.05.2027) அமல்படுத்தப்படும்‌. மீன்‌ மற்றும்‌ இறைச்சி கடைகளில்‌ பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடுவதால்‌, இந்த கடைகளைப்‌ பல்வேறு இடங்களுக்குப்‌ பரவலாக மாற்றம்‌ செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ மாவட்ட ஆட்சியர்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!