தமிழகத்தில் நாளை (பிப். 4) பள்ளிகள் இயங்கும் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!

0
தமிழகத்தில் நாளை (பிப். 4) பள்ளிகள் இயங்கும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!
தமிழகத்தில் நாளை (பிப். 4) பள்ளிகள் இயங்கும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!
தமிழகத்தில் நாளை (பிப். 4) பள்ளிகள் இயங்கும் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!

தமிழகத்தில் பருவமழை காரணமாக, பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், சென்னையில் நாளை (பிப். 4) பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. அதை அடுத்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, நவம்பர் மாதம் முழுவதும் பெரும்பாலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

போக்குவரத்து அபாரதங்களுக்கு 50% தள்ளுபடி – கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

அந்த நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை (பிப். 4) சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை விடப்படுகிறது. மேலும் விடுமுறை அறிவிப்பு குறித்து நாளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!