போக்குவரத்து அபாரதங்களுக்கு 50% தள்ளுபடி – கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து துறைக்கான அபராதமாக பொதுமக்கள் சுமார் 530 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் இந்த அபராதத்தை வசூல் செய்வதற்கு கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அபராதம்
கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்துத்துறை விதி மீறல்களுக்காக பொதுமக்கள் சுமார் 530 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. இதுவரை இந்த அபராதத் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த அபராத தொகையை வசூலிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவரான நீதிபதி வீரப்பாவுடன் கடந்த வாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துறையில் 530 கோடி ரூபாய் விரைவில் வசூலிக்கப்பட வேண்டும். அத்துடன் பெங்களூரில் இருந்து மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் அபராதம் வசூலாக வேண்டும். அதனால் இந்த அபராத தொகையை வசூலிப்பதற்கு தாங்கள் செலுத்த வேண்டிய அபராத தொகையில் 50% தள்ளுபடி கொடுக்கப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூருவில் வசிப்பவர்கள் போக்குவரத்து காவல் நிலையங்களுக்குச் சென்று அபராத தொகையினை செலுத்தலாம் அல்லது போக்குவரத்து காவல்துறையின் https://bangaloretrafficpolice.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் செலுத்தலாம். இதே போன்று மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களுக்குச் சென்றும் அபராதம் செலுத்தலாம்.