தமிழக ஆசிரியர் பணிக்கான நியமன தேர்வு – ரத்து செய்ய கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன தேர்வு முறையை ரத்து செய்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமன தேர்வு:
தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்று முதல் இந்த ஆண்டு வரை நடத்தப்பட்ட 5 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 1 லட்சத்துக்கு மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை பணிநியமனம் வழங்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து பல முறை தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்க 15 மாவட்டங்களில் 22 இடங்களில் உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல், காத்திருப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம், சான்றிதழ் ஒப்படைப்புப் போராட்டம் என பல போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்த பயனும் இல்லை.
தமிழக அரசுப்பள்ளி சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் – மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு கடந்த ஆண்டு முதல் 40 ஆயிரம் பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆட்சியில் இதுவரை ஒருவருக்கு கூட பணி நியமனம் வழங்கப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் தேர்ச்சி பெற்ற எங்களை மீண்டும் நியமன தேர்வு எழுத சொல்லுவது மிகுந்த மனஉளைச்சலை அளிக்கிறது.
ஒரே நாளில் கிராம வங்கி தேர்வுகள் – மாற்று தேதி அறிவிக்க கோரிக்கை!!
எனவே நியமன தேர்வை ரத்து செய்துவிட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு படிப்படியாக பணி வழங்க வேண்டும். இந்த அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முதல்வர் அறிவிக்க வேண்டும் என 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்