தமிழக அரசுப்பள்ளி சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் – மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!!
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி சுவர்களில் வாசகங்களை எழுத நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி சுவர்களில் வாசகங்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் வகுப்பறை, உணவு அருந்தும் கூடம், சுற்றுச்சுவர்களில் வாசகங்கள் எழுத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுத உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு தொடக்கப்பள்ளிகளில் அதிகப்படியாக 8 வாசகங்களும், நடுநிலை பள்ளிகளில் அதிகபட்சம் 5 வாசகங்களும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தினசரி மாணவர்கள் பள்ளிக்கு வந்தபின் இந்த வாசகங்களை எடுத்துரைப்பது அவசியம் ஆகும். இதனை செய்வதற்கு கல்வி மாவட்டங்கள் வாரியாக உள்ள பள்ளிகளை கணக்கீடு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் கிராம வங்கி தேர்வுகள் – மாற்று தேதி அறிவிக்க கோரிக்கை!!
மேலும் இந்த வாசகங்கள் எழுத அந்தந்த பள்ளி வங்கிக் கணக்கிற்கு நிதி தொகை அனுப்பப்படும். இந்த பணிகளை வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் முடித்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்