ஒரே நாளில் கிராம வங்கி தேர்வுகள் – மாற்று தேதி அறிவிக்க கோரிக்கை!!
தமிழகத்தில் ஒரே நாளில் இரு வங்கி தேர்வுகள் நடைபெறுவது குறித்து மதுரை எம்பி உள் ஆய்வு குழுவிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
வங்கி தேர்வு குறித்த அறிவிப்பு:
தமிழகத்தில் மண்டல கிராம வங்கி அதிகாரிகள் பணிகளுக்கான நேர்முக தேர்வுகள் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் மண்டல கிராம வங்கிகளுக்கான எழுத்தர் பணிகளுக்கான இறுதி தேர்வுகள் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்த பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் தேர்வு தேதிகளில் மாற்றம் வேண்டும் என மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதினார்.
TN Job “FB Group” Join Now
அதற்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், “தேதி மாற்றம் குறித்து உள் ஆய்வுக்குழு பரிசீலித்து அதே தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து மதுரை எம்பி மீண்டும் கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளவை, “தேதி மாற்றம் குறித்து உங்கள் பதில் ஏமாற்றம் அளிக்கின்றது. உங்களின் உள் ஆய்வு குழு இரண்டு தேர்வுகளிலும் பங்குபெறும் இரண்டு தேர்வர்களை பற்றி விசாரிக்கவில்லை.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி – பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை!!
இரண்டு தேர்வுகளும் ஒரே தொழில் சார்ந்து உள்ளதால் ஏதாவது ஒரு வாய்ப்பை தவற விடுவதாக உள்ளது. இது தேர்வர்களின் வாழ்வாதார பிரச்சனையாக உள்ளது. கால அவகாசம் குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது சரிதான். ஆனால் தேர்வர்களுக்காக உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்