முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக மாறும் அமைச்சுப் பணியாளர்கள் – பெயர் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் அமைச்சுப் பணியாளர்கள் முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அமைச்சுப் பணியாளர்கள்:
தமிழகத்தில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப 2% இடஒதுக்கீட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் ஆணை வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு 251 தகுதியான பணியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்து ஆணை வழங்குவார்கள்.
மாவட்ட பதிவுத்துறையில் உள்ள 1376 காலிப்பணியிடங்கள் – விரைவில் நியமனம்!!
இந்த அமைச்சுப் பணியாளர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க தகுதியாக முதன்மை பாடத்திட்டத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் பி.எட் படிப்புகளை படித்திருக்க வேண்டும். மேலும் அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி பட்டியல் தயார் செய்து அதனை முதன்மை கல்வி அதிகாரிகளிடம் அனுப்ப வேண்டும். இதில் உள்ள தவறுகளுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே தவறுகள் எதுவும் நிகழாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
இவங்களுக்குExam இல்லையா..
பள்ளிக்கல்வியில் வேலை செஞ்சா
Subject knowledge வந்துடுமா..திருந்தாத தமிழ்நாடு திருந்தாது.