தமிழக பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் – ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை விடுமுறை:
9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்ட நிலையில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்க தலைவர் அன்பரசு, செயலாளா் செந்தில்நாதன், துணைத்தலைவா் சுந்தரகுருமூா்த்தி ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதில் குறிப்பிட்டுள்ளவை, “ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு பலன் பெற முடியாமல் அவர்கள் தவித்து வந்த நிலையில் அந்த வழக்குகளை ரத்து செய்ததற்கு தமிழக அரசிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிகான கலந்தாய்வு விரைவில் நடத்த வேண்டும்.
தமிழகத்தில் புதிய கல்லூரிக்கல்வி இயக்குனர் நியமனம்!!
2004-2006 ஆம் ஆண்டுகளில் பணியில் சோ்ந்த ஆசிரியா்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டும். மேலும் 6 நாட்கள் வகுப்பு நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதால் அவர்களுக்கு அதனை குறைக்கும் வகையில் மாதத்தின் முதல் மற்றும் 3ஆவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Dai students nalan pakkama porattam pannidu ippo Yana mayurukkuda ippa vayi pesuringa