தமிழகத்தில் புதிய கல்லூரிக்கல்வி இயக்குனர் நியமனம்!!

0
தமிழகத்தில் புதிய கல்லூரிக்கல்வி இயக்குனர் நியமனம்!!
தமிழகத்தில் புதிய கல்லூரிக்கல்வி இயக்குனர் நியமனம்!!
தமிழகத்தில் புதிய கல்லூரிக்கல்வி இயக்குனர் நியமனம்!!

தமிழகத்தில் புதிய கல்லூரிக்கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் சென்னை டிஜிபி வளாகத்தில் உள்ள கல்லூரியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்லூரிக்கல்வி இயக்குனர்:

தமிழகத்தில் கல்லூரிக்கல்வி இயக்குனர் சாருமதி கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி ஓய்வுபெற்றார். இந்நிலையில் காலியாக இருந்த அந்த பணியிடத்திற்கு பூர்ணசந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

TN Job “FB  Group” Join Now

அந்த வழக்கில் அவர் குறிப்பிட்டுருந்தது, “பணிமூப்பு அடிப்படையில் தனக்கு முன்னுரிமை உள்ள நிலையில் பூர்ணசந்திரன் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்”, என கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி பூர்ணசந்திரன் பணி நியமனத்தை ரத்து செய்வதாகவும், மேலும் காலியாக உள்ள அந்த பணியிடத்தை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

இன்று நள்ளிரவு முதல் ‘பாஸ்டேக்’ கட்டாயம் – மீறினால் இருமடங்கு கட்டணம்!!

இந்நிலையில் அரசு விதிகளின் படி பணிமூப்பு அடிப்படையில் 5 இடங்களில் உள்ளவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நேர்காணல் தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. அதில் மீண்டும் இயக்குனராக பூர்ணசந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சென்னை டிஜிபி வளாகத்தில் உள்ள கல்லூரியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!