இன்று நள்ளிரவு முதல் ‘பாஸ்டேக்’ கட்டாயம் – மீறினால் இருமடங்கு கட்டணம்!!
இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் சேவை காட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில் வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாஸ்ட்டேக் கட்டாயம்:
நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணத்தை மின்னணு முறையில் மாற்ற 2016 ஆம் ஆண்டு முதல் FASTAG முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது குறைக்கப்படும். இந்நிலையில் கொரோனா காலத்தில் இருந்து பாஸ்ட்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் அதை யாரும் பின்பற்றாத காரணத்தால் கடந்த மாதம் 15 ஆம் தேதி வரை கட்டாயம் வாகனங்களில் பாஸ்டேக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. மேலும் இனிமேல் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சுயநிதி கல்லூரிகளில் BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு – இன்று முதல் தொடக்கம்!!
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டில் உள்ள சாலைகளில் பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நீட்டிக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு கட்டாயம் பாஸ்டேக் சேவை அமல்படுத்த வேண்டும். பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்