தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆல் பாஸ் அறிவிப்பு:
தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நடத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு அந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யபட்டாலும் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
மேலும் வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா காலத்தில் 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிகளில் NMMS தேர்வுகள் – மார்ச் 10 ஆம் தேதி கடைசி நாள்!!
இந்த அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர் வருகை குறைவாகவே உள்ளது. குறிப்பாக சனிக்கிழமைகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு தேர்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு வகுப்புகள் நடத்துவதிலும், பயிற்சி வழங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பள்ளிகளில் சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்