தமிழக பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு செல்வதால் சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு பள்ளிக் கல்வித்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சனிக்கிழமை விடுமுறை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மாணவர்களை தயார் செய்யும் பணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாலும், பள்ளிகள் சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் நடைபெறும் என்பதாலும் ஆசிரியர்கள் பாடங்களை நடத்துவதில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
நீட் தேர்வு ரத்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் – திமுக தேர்தல் அறிக்கை!!
மேலும் வாரத்தில் 6 நாட்களும் பள்ளி நடைபெறுவதால் ஏழாவது நாள் தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் ஆசிரியர்கள் பலர் உடற்சோர்வு மற்றும் மனசோர்வு ஏற்படுகிறது. எனவே ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.