நீட் தேர்வு ரத்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் – திமுக தேர்தல் அறிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில் கல்வி முன்னேற்றத்திற்காகவும், கல்வி பயிலும் மாணவர்களுக்காகவும் பல நல்ல திட்டங்களை தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். நேற்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். மேலும் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில் தமிழக கல்வித்துறையில் பல நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கல்விக்கடன் ரத்து, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் வருவது போன்ற பல நலத்திட்டங்கள் உள்ளனர். தேர்தல் அறிக்கையில் கல்வித்துறை சம்மந்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு பின்வருமாறு,
தமிழக சட்டமன்ற தேர்தல் – மின்னணு வாக்காளர் அட்டை வழங்கல் சிறப்பு முகாம்!!
- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் பால் வழங்கப்படும்.
- அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்படும்.
- கல்வி நிறுவனங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும்.
- தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை – அரசு அறிவிப்பு!!
- அரசுப் பள்ளி, கல்லூரி மாணவியர்க்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.
- ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
- நீட் தேர்வு ரத்து செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
- மருத்துவக் கல்லூரி இடங்கள் அமைத்தும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.