தமிழக சட்டமன்ற தேர்தல் – மின்னணு வாக்காளர் அட்டை வழங்கல் சிறப்பு முகாம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக மின்னணு வாக்காளர் அட்டை பெற இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மற்றும் நாளை மின்னணு வாக்காளர் அட்டையை பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்போன் எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து – திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!
வாக்காளர்கள் சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் (படிவம்-6) தனிப்பட்ட தொலைபேசி எண் (Unique Mobile No) பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) NVSP https://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்கான 2 நாள் சிறப்பு முகாமை இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நடத்த உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த முகாம் மூலமாக வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்போன்/ கணினி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே வாக்காளர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.