ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இந்நிலையில் பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கலாம் என கல்வித்துறை குழு ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு முதல்கட்டமாக தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள் திறக்கப்பட்டன. அதன் பின் அடுத்தகட்டமாக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின.
TNPSC குரூப் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் – தேர்வர்கள் தவிப்பு!!
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என அரசு தரப்பிற்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதியும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதியும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று ஆலோசித்தனர்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்த அறிக்கையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு சார்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்தினை கேட்டு அதன்பின் தான் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.