தமிழகத்தில் உள்ள ‘கற்போம் எழுதுவோம்’ மையம் குறித்து ஆய்வு – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!!
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ‘கற்போம் எழுதுவோம்’ மையங்களை பார்வையிட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்கத்தின் இயக்குனர், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
‘கற்போம் எழுதுவோம்’ அமைப்பு:
தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மையங்கள் அமைத்து தினமும் 2 மணி நேரம் என வகுப்புகள் நடத்தப்படும்.
இந்திய நிறுவனங்களில் 7.6% ஊதிய உயர்வு வழங்கப்படும் – ஆய்வு முடிவில் தகவல்!!
இந்நிலையில் அந்த மையங்களை ஆய்வு மேற்கொள்ள பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை, “அந்தந்த பகுதிகளில் உள்ள கற்போம் எழுதுவோம் மையங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் என அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களை பார்வையிட வேண்டும்.
பழைய 100, 10 & 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கம் – ரிசர்வ் வங்கி முடிவு!!
மேலும் அவைகளின் விவரங்களையும், அவற்றில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அவைகளில் தன்னார்வலராக வரும் ஆசிரியர்களின் வருகை குறித்த விவரங்களை அதிகாரபூர்வ செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்