தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தினால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடுமையாக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 10 மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் வகுப்புகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிக்கு வரும் போது மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை குறிப்பிட்ட இடைவெளியில் கழுவுதல் போன்றவற்றை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருந்த போதிலும் மாநிலத்தில் சில பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’, ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே பள்ளிகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது எனவும், மாணவர்களின் உடல்நிலை கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.