1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’, ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு:
புதுச்சேரியில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த பின்னர் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதேபோல டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பகுதி நேரமாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. அதன் பின்னர் பள்ளிகள் முழுநேரம் செயல்பட உள்ளது.
தமிழக காவல்துறையினருக்கு விடுமுறை அறிவிப்பு – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!
இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி பள்ளிகள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் எனவும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ள மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.