தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து பெற்றோர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் விரைந்து தமிழக அரசு முக்கிய முடிவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்தேர்வு ரத்து:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை போல் இல்லாமல் இரண்டாம் அலை தாக்கம் அதிக வீரியமிக்கதாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டு தேர்வு நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் அவர்களுக்கு வழக்கமாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதும் அவர்களுக்கு நேரடி முறைப்படி தேர்வுகள் நடத்துவதும் சிரமம் என்பதால் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அனுமதி – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்யப்படும் எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தலைமை செயலருடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பொதுத்தேர்வு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ய வேண்டும் பொது தேர்வு நடத்தினால் மாணவர்களின் வாழ்க்கை பாதிப்பு ஏற்படும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பொது தேர்வு ரத்து செய்ய வேண்டும் இது மாணவர்களின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவு எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக்கொள்கிறோம் மாநில மற்றும் மத்திய அரசு
Correct