பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அனுமதி – ஏஐசிடிஇ அறிவிப்பு!!

0
பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அனுமதி - ஏஐசிடிஇ அறிவிப்பு!!
பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அனுமதி - ஏஐசிடிஇ அறிவிப்பு!!
பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அனுமதி – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்குவதற்கு அனுமதி கோரலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகள்:

நாடு முழுவதும் ஏ.ஐ.சி.டி.இ நிர்வாகத்தின் கீழ் சுமார் 4,000க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக தேர்ச்சி பெறுகின்றனர். பொறியியல் கல்லூரிகள் ஆண்டு தோறும் தங்களின் அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் புதுப்பிக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளுக்கான முக்கிய அறிவிப்பு – ஏஐசிடிஇ வெளியீடு!!

அங்கீகாரம்:

பொறியியல் கல்லூரிகள் தங்களின் அங்கீகாரத்தை ஏ.ஐ.சி.டி.இ யில் புதுப்பித்துக் கொள்வதற்காக மார்ச் 9ம் தேதி முதல் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கான காலக்கெடு ஏப்ரல் 13ம் தேதி அன்று முடிவதாக இருந்த நிலையில், கொரோனா தொற்று சூழல் காரணமாக ஏப்ரல் 23ம் தேதி வரை கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

புதிய பாடங்கள்:

முந்தைய காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களிடம் இருந்த ஆர்வம் சமீப காலங்களில் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் குறைந்து வருகிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் புதிய படப்பிரிவுகளை வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்குவதற்கு ஏ.ஐ.சி.டி.இ யிடம் அனுமதி கோரலாம் என்று அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!