தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளுக்கு திறனாய்வு தேர்வு – கல்வித்துறை ஆலோசனை!!!
தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்துவதற்கு தமிழக கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பாதிப்புகள் பரவி வந்தது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. கடந்த ஆண்டு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் நடத்த முடியாத சூழல் நிலவியதால் அரையாண்டு, காலாண்டு மற்றும் வருகைப்பதிவு ஆகியவற்றை பொறுத்து இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடங்கள் ஆரம்பத்தில் இருந்து ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்பட்டது.
இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
ஆல்பாஸ் அறிவிப்பு:
நடப்பு கல்வி ஆண்டில் ஜனவரி மாதத்தில் தான் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. மேலும், பள்ளிகள் செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் தமிழக முதல்வர் 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார்.
குழப்பம்:
அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்களை வழக்கும் முறை குறித்து பள்ளிகள் குழப்பத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தி அதன் மூலம் மதிப்பெண்களை வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த தகவலினால் பள்ளி நிர்வாகங்கள் அனைத்தும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்