இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த காரணத்தால் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த 2020 மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும் தொழில்துறை மிகவும் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தாலும், தொற்று பாதிப்பு குறைந்ததாலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – இன்று (ஏப்ரல் 15) கடைசி நாள்!!
அதிகரிக்கும் பாதிப்பு:
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாட்டும் ராஜஸ்தானில் 6,200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1,325 பாதிப்புகள் கண்டறியப்பட்டது. அதிகரிக்கும் தொற்றின் பாதிப்புக்களை குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
ராஜஸ்தான் மாநிலத்தில் இதனால் நாளை (16.4.2021) முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 16ம் தேதி முதல் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதனால் அனைத்து கடைகள், மார்கெட்டுகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்களும் மாலை 5 மணிக்குள் அடைக்கப்படும். பஸ் நிலையங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூடுவது மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது என்றும் ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்