தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக மூடப்பட்டன. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் கொரோனா தாக்கம் குறைந்து வந்த காரணத்தினால் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவ தொடங்கியதன் காரணமாக 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. சில மாவட்டங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!!
அதன்படி வகுப்பறைகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு இடையே சமூக இடைவெளிஇடைவெளியை பின்பற்றும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளியில் இருக்கும் நேரம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும், சளி & காய்ச்சல் அறிகுறிகள் உள்ள மாணவர்கள் பள்ளிக்குள் வர அனுமதிக்கப்பட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒரே வழி – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!!
மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட வேண்டும். மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் கைகளை கழுவ மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு பல கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் மாணவர்களை எந்தவித அச்சமும் இல்லாமல் பள்ளிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Close tha school but the exam later