தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அரசு ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முகக்கவசம் கட்டாயம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் பணிகளில் பல துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து அதற்கான வாக்குப்பெட்டிகள் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தனியார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அதனை பார்வையிட நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நேற்று வந்தார். அப்போது அங்கு வாக்குப்பெட்டிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது? முகவர் அமர்ந்துள்ள இடங்கள், அடையாள அட்டை கொண்டவர்கள் மட்டுமே அனுமதி, வாக்குப்பெட்டிகளை பாதுகாக்கும் எல்லைக்குள் வருபவர்களின் எண்ணிக்கை போன்றவை கண்காணித்தார்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது அதில் பங்கேற்கும் முகவர்கள் கொரோனா விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.