தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதால், பள்ளிகளுக்கு அருகே விற்கப்படும் பொருட்கள் குறித்து கண்காணிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 18வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சிறு வயதிலேயே இதற்கு அடிமையாகி இருக்கின்றனர். அதனால் அசம்பாவித சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதாவது போதைப்பொருள் பரவல் அதிகரித்து இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.60,000/- ஊதியம்!
அதாவது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அருகே இயங்கும் பெட்டிக்கடைகள், பேக்கரியில், பழசாறு கடைகள், தேநீர் கடைகள் என அனைத்திலும் சாக்லேட் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி சந்தேகப்படும்படி எதாவது தெரியாத பெயரில் சாக்லேட், பிஸ்கட் விற்பனை செய்யப்பட்டால், அது குறித்து போலீசிடம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.