தமிழக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30க்குள் ‘இது’ கட்டாயம் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள் ஊரடங்கும் அமலில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஏற்கனவே பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும், ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி ஆசிரியர்கள் சிலர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
இதன் காரணமாக 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 45 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் தங்களது விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.