பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 செயற்கைகோள்கள் – பிப்ரவரி 7ம் தேதி விண்ணில் ஏவ திட்டம்!!
முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தயாரித்த சிறிய அளவிலான 100 செயற்கைகோள்களை ராமேஸ்வரத்தில் இருந்து பிப்ரவரி 7 ஆம் தேதி வானில் செலுத்தப்பட உள்ளதாக அப்துல் கலாம் பேரனும், சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான ஷேக் சலீம் தெரிவித்துள்ளார்.
செயற்கைகோள்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களில் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 10 மாணவர்கள் கொண்ட குழு அமைத்து ஒரு குழுவில் ஒரு செயற்கைகோள் என 100 செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவாக வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து வானில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்துல்கலாம் பேரனும், சர்வதேச அறக்கட்டளை நிறுவருமான ஷேக் சலீம் கூறியது, “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விண்வெளி கல்வியை ஊக்குவிக்கும் விதத்தில் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன்மூலம் 100 கையடக்க பொம்டோ செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் மையத்தில் வைத்து விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.
பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக பேராசிரியர் செல்வம் நியமனம் – கவர்னர் உத்தரவு!!
மாணவர்கள் தயாரித்த இந்த செயற்கைக்கோள் 40 கிராம் முதல் அதிகபட்சமாக 50 கிராம் வரை எடை உள்ளது. வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி ராட்சச பலூனில் ஹீலியம் நிரப்பப்பட்டு அந்த பலூனில் இந்த செயற்கைகோள்களை வைத்து சுமார் 8000 மீட்டர் உயரம் வரை கயிறு மூலமாக செலுத்தப்படும். கணக்கிடப்பட்ட உயரம் வரை சென்றதும் அந்த பலூன் கீழே கொண்டு வரப்பட்டு செயற்கைகோள்கள் அளவிட்ட ஓசோன் அளவு, காற்றின் வேகம், கதிர்வீச்சு, விவசாயம் போன்றவை கணினி மூலம் கணக்கிடப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்