தமிழக ஆர்.டி.ஓ அலுவலக ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

0
தமிழக ஆர்.டி.ஓ அலுவலக ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
தமிழக ஆர்.டி.ஓ அலுவலக ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
தமிழக ஆர்.டி.ஓ அலுவலக ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்ககோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டார அலுவலக பணியாளர்கள்:

தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகங்களில் உள்ள புரோகிராமர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்ஸ் போன்ற பணியிடங்களுக்கு தனியார் துறை மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க போக்குவரத்து ஆணையர், உள்துறை செயலாளருக்கு பரிந்துரை அனுப்பினார். அதில் 2000 முதல் 2018ம் ஆண்டு வரை தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும் அந்த பணியிடங்களில் பணியாற்றி வரும் சிவக்குமார் கார்த்திகேயன் உள்பட 27 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவில்லை என வழக்கு தொடர்ந்தனர். அவ்வாறு அவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனுவில் வணிகவரித்துறை, நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படாதவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முடியாது என உள்துறை செயலாளர் தெரிவித்தார். இந்த வழக்கு குறித்து நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில், வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட துறைகளில் தற்காலிக பணியாளர்கள் பணிநிரந்தம் செய்யும் போது 10 முதல் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து, பணி நிரந்தரம் வழங்கப்படும் என காத்திருக்கும் இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது குறித்து அரசு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் மோடி வருகை எதிரொலி!!

மேலும் இந்த வழக்கு குறித்து உள்துறை செயலாளர் 2 மாதங்களில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் எனவும், மேலும் பொதுப்பணித்துறை மூலம் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்வது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரிசீலிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!