தமிழகத்தில் நதிகள் இணைப்பு குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி, வைப்பாறு, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் தமிழக அரசு ரூ.200 கோடி ஒதுக்கி இருக்கிறது.இது 150 ஆண்டு கால கனவு திட்டம். இதன் மூலம் அதிக விவசாய நிலப்பரப்பு பயனடைவார்கள். இந்நிலையில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கான நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30ல் வரும் நல்ல செய்தி – முழு விவரம் இதோ!
ஆனால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையவில்லை. இது குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரணை நடத்தியது. அதில் காவிரி முதல் புதுக்கோட்டைவரை 2 வது கட்ட பணி 66 சதவீதம் முடிந்து இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய நீர்வளத்துறையின் தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை இயக்குனர், தமிழக தலைமைச் செயலர், தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.