தமிழகத்தில் புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சிறப்பு பேருந்துகள்
தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். அதிலும் தற்போது 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்துள்ளது. அதனால் தினமும் பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்படுகிறது.
Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
அந்த வகையில் மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு வரும் 28 ஆம் தேதி அன்று 505 பேருந்துகளும், மார்ச் 29 அன்று 300 பேருந்துகளும், மார்ச் 30 அன்று 345 பேருந்துகளும் இயக்கப்படும் என வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.