தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை வெளியீடு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நோய் பாதிக்கப்பட்டவர்கள் ரேஷன் பொருள்கள் எவ்வாறு வாங்குவது என குழப்பத்தில் இருப்பர். அதனால் தற்போது கூட்டுறவுத் துறை சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நோய் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அங்கே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பகுதி மக்கள் எவ்வாறு ரேஷன் பொருள்களை வாங்க முடியும் என குழப்பத்தில் உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு துறை முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
மே 8 முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
- அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருள்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- ரேஷன் பொருள்கள் அனைத்தையும் எந்த சேதாரம் இன்றி உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- வாடிக்கையாளர்கள் எந்த புகார் அளிக்காத முறையில் விநியோகம் செய்ய வேண்டும்.
- ரேஷன் பொருள்கள் அனைத்தும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும். இதனை உரிய அலுவலர்கள் மூலமாக கண்காணிக்க வேண்டும்.
இந்தியாவில் ஒரே நாளில் 4,12,262 பேருக்கு கொரோனா – 3,980 பேர் உயிரிழப்பு!!
- ரேஷன் பொருள்கள் வாங்க வரும்போது சரியான இடைவெளியில் நிற்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
- தனிமைப்படுத்தி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் பொருள்களை அந்தந்த பகுதிகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்க வேண்டும்.
- அவ்வாறு சென்று வழங்கும் போது ஊழியர்கள் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.